பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 துணை நடிகைகள் சிக்கினர்!!!

Wednesday,February 22,2012
சென்னை::பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 துணை நடிகைகள் கைது செய்யப்பட்டனர். பாலியல் தொழிலில் துணை நடிகைகள் ஈடுபடுவதாக, உதவி கமிஷனர் கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலியல் தடுப்பு பிரிவு போலீஸ்காரர், பெண் ஒருவரிடம் போனில் பேசினார். அந்த பெண் தன்னிடம் 2 துணை நடிகைகள் இருப்பதாகவும், 25 ஆயிரம் கட்டணம் என்றும் கூறியுள்ளார். கிண்டி ரயில் நிலையம் அருகே வரும் படியும் அழைத்துள்ளார்.

அதன்படி போலீஸ்காரர் மப்டியில் அங்கு சென்றார். அப்போது அந்த பெண், 2 துணை நடிகைகளை காட்டி பணம் கேட்டார். உடனே மறைந்திருந்த போலீசார் 3 பேரையும் பிடித்தனர். விசாரணையில், துணை நடிகையின் பெயர் சோபனா(46), தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். பழைய வில்லன் நடிகர் ராம்தாசின் உறவினர் என்பது தெரிந்துள்ளது. மேலும் 2 துணை நடிகைகளையும் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இந்த தொழில் செய்துள்ளார். இதையடுத்து சோபனாவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சூளைமேட்டில் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெயராஜ், மோசஸ், சாந்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 4 இளம்பெண்கள் மீட்டகப்பட்டனர். கைது செய்யப்பட்ட சாந்தியும் துணை நடிகை ஆவார்.

Comments