சூர்யா படம் கேன்சலா? இயக்குனர் ஹரி பேட்டி!

Friday, January 13, 2012
சூர்யாவை வைத்து இயக்க திட்டமிட்டிருந்த படத்தை கைவிடவில்லை. படத்துக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது என்று இயக்குனர் ஹரி கூறினார். இதுபற்றி ஹரி கூறியதாவது: சூர்யா நடித்த ‘சிங்கம்’ பெரிய வெற்றி அடைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். அதற்கான ஸ்கிரிப்ட் மெருகேற்றும் பணியில் மும்முரமாக இருக்கிறேன். இந்நிலையில் சூர்யாவை இயக்கும் படம் கைவிடப்பட்டதாக நெட்டில் வதந்தி பரப்புகிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது ‘மாற்றான்’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அதற்கான ஷூட்டிங், புரமோஷன் என்று பிஸியாக இருக்கின்றனர். இதற்கிடையில் என் படம் பற்றிய தகவல்களை சொன்னால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் அமைதியாக இருக்கிறேன். ‘படம் டிராப் என்று எப்படி செய்தி வருகிறது?’ என சூர்யாவே என்னிடம் கேட்டார். சூர்யாவிடம் இப்படத்தின் கதையை 6 மாதம் முன்பே கூறிவிட்டேன். இப்போதும் அடிக்கடி சந்தித்து அதுபற்றி பேசி வருகிறோம். இப்படம் சிங்கம் 2-ம் பாகமா என்கிறார்கள். அதுபற்றி இப்போது சொல்ல முடியாது. இன்னும் சில நாட்களில் சூர்யாவும் நானும் இதுபற்றி அறிவிப்போம். கமர்ஷியலாக உருவாகும் இப்படம் தமிழ் திரையுலகில் புது முயற்சியாக இருக்கும். அனுஷ்கா ஹீரோயின். சந்தானம் முதன்முறையாக எங்கள் கூட்டணியில் இணைகிறார். மார்ச்சில் ஷூட்டிங் தொடங்கும். என் படங்களில் பாடல் காட்சிகளை மட்டுமே இதுவரை வெளிநாடுகளில் படமாக்கியுள்ளேன். இந்த படத்தின் முக்கிய காட்சிகள் நைஜீரியா, தென்ஆப்ரிக்காவில் படமாக இருக்கிறது. காரைக்குடியில் பிரமாண்ட செட் அமைக்கும் பணியும் நடந்துவருகிறது. ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஹரி கூறினார்.

Comments