கொலவெறிக்கு பதிலளிக்கிறார் அனிருத்: வாசகர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம்!

Tuesday, January 10, 2012
உலகின் சந்து, பொந்து மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலி(ளி)த்து கொண்டிருக்கும் ஒரு பாடல் என்றால், அது கொலவெறி தான். முதல் படத்திலேயே, அதுவும் படம் வெளிவருவதற்கு முன்பே ஒரே பாட்டிலேயே உலகம் முழுவதையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர் கொலவெறி பாடலின் இசையமைப்பாளர் அனிருத். பலர் இப்பாட்டை வரவேற்ற ‌போதிலும், சிலர் இந்தபாட்டை எதிர்த்தும் வருகின்றனர்.

இந்நிலையில் தினமலர் இணையளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், கொலவெறி பாட்டை இவ்வளவு பெரிய ஹிட்டாக்கிய ரசிகர்களுக்கு நன்‌றியை தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து நல்ல நல்ல பாட்டுகள் கொடுக்க தான் முயற்சி பண்ணுவதாகவும் தெரிவித்தார். மேலும் இப்பாட்டு தொடர்பான எந்த விதமான கேள்விக்கும் தான் பதிலளிக்க தயாராக இருப்பதாக அனிருத் கூறியுள்ளார். ஆகையால் வாசகர்களாகிய நீங்கள் இப்பாட்டு தொடர்பான உங்களுடைய கருத்துக்கள், கேள்விகளை நீங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு அனிருத் விரைவில் பதிலளிக்க உள்ளார்.

Comments