விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி த்ரிஷா பேட்டி!!!

விஷாலின் நெடுநாள் கனவான த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை இப்போது சமரன் படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. திரு இயக்கும் இப்படத்தில் விஷால், த்ரிஷா ஆகியோருடன் சுனேனாவும் நடித்து வருகிறார். ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லர் நிறைந்த படமாக சமரன் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி என்று த்ரிஷா கூறியிருக்கிறார். அதாவது, விஷாலும், நானும் நீண்டநாள் ‌நண்பர்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று சில வருடத்திற்கு முன்பே தீர்மானித்தோம். ஆனால் இருவரும் வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.

சமரன் படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது என்னால் மறுக்கமுடியவில்லை. காரணம் சத்யம் படத்திலேயே என்னை நடிக்க விஷால் அழைத்தார். ஆனால் முடியவில்லை. அதனால் இந்தபடத்தை மறுக்க முடியவில்லை. மேலும் சமரன் படத்தின் கதையும் எனக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. அதனால் உடன் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்

Comments