செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!!!

டைரக்டர் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை இயக்கியிருப்பவர் செல்வராகவன். இவர் முதலில் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தார். அதன் பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த கையோடு, கீதாஞ்சலி என்ற உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு சென்னையில் நடந்தது. இந்நிலையில் கீதாஞ்சலி கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று (20ம்தேதி) மாலை 5.25 மணிக்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த செல்வராகவன், அங்குள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பிரசவத்திற்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments