Sunday, January 15, 2012ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா கோச்சடையான் பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ரஜினி நடிக்கும் இப்படத்தை சவுந்தர்யாவே இயக்குகிறார்.
இதில் ரஜினி ஜோடியாக நடிக்க கத்ரினா கயூப்புடன் பேசி வருகின்றனர். இதற்கிடையில் பேஸ்புக்கில் தனது பெயரில் மோசடி நடப்பதாக சவுந்தர்யா புகார் கூறி உள்ளார்.
இதுபற்றி சவுந்தர்யா அளித்த பேட்டி வருமாறு:-
பேஸ்புக்கில் எனது பெயரில் நிறைய போலி அக்கவுண்டுகள் உள்ளன. அது நான் அல்ல. அவற்றில் எனது படங்களையும் நான் தெரிவித்த கருத்துக்களையும் போட்டு வைத்துள்ளனர். நான் பேஸ்புக்கில் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். டுவிட்டரில் மட்டும் இருக்கிறேன்.
இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.
Comments
Post a Comment