இலியானாவுடன் மோதலா? பிரியங்கா பரபரப்பு பேட்டி!!!

இலியானாவுடன் மோதலா என்பதற்கு பிரியங்கா சோப்ரா பதில் அளித்தார். பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ரா. இவர் கூறியதாவது: இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘அக்னீபத்’ படம் இந்தியில் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. அதேபோல் ‘சாத் கூஹுன் மாப்’ என்ற படத்திற்காக பிலிம்பேர் விருது கிடைத்திருக்கிறது. இதை கொண்டாடும் ஆசை இருக்கிறது. ஆனால் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். இப்போதும் வாய்ப்புகள் வருகின்றன. மனதுக்கு பிடித்ததாக அமையவில்லை. கால்ஷீட் பிரச்னையும் நடிக்க முடியாததற்கு காரணம். நல்ல வேடம் வந்தால் நிச்சயம் ஏற்பேன். ‘பர்பி’ என்ற படத்தில் நானும் இலியானாவும் சேர்ந்து நடித்தோம். எங்களுக்குள் மோதல் என்று கிசுகிசு வெளியானது. அப்படி எதுவும் இல்லை. இலியானா இனிமையானவர் மட்டுமல்ல அழகானவர், நல்ல நடிகை. ஒருவருடத்துக்கும் மேலாக இருவரும் இணைந்து பணியாற்றினோம். அவரது தாய், தங்கையை நான் சந்தித்து பேசி இருக்கிறேன். நாங்கள் தோழிகளாக இருக்கிறோம். இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.

Comments