சிம்பு, ஜீவா இனி 'நண்பேண்டா.'...!

சிம்புவும், ஜீவாவும் தங்களது மோதல் பூசலை கைவிட்டு விட்டதாக தெரிகிறது. இருவரும் ட்விட்டர் மூலம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

திரையுலகில் வழக்கமாக நடிகைகளுக்கு இடையேதான் முட்டல் மோதல் அதிகம் இருக்கும். ஆனால் சமீப காலமாக நடிகர்களுக்குள்ளும் இது அதிகரித்துள்ளது. விஜய் அஜீத் மோதல், தனுஷ் சிம்பு மோதல் நாடறிந்த ஒன்று.

இந்த வரிசையில் சமீபத்தில் வெடித்த மோதல் சிம்பு- ஜீவா இடையிலானது. கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் சிம்பு. சில பல காரணங்களுக்காக அது ரத்தாகி, ஜீவா ஹீரோவானார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகவே, சிம்பவுக்கு டென்ஷனாகி விட்டது.

இதையடுத்து அவருக்கும் ஜீவாவுக்கும் இடையே மோதல் மூண்டது. இருவரும் தனித் தனியே ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தனர். இந்த மோதலில் ஜீவாவுக்கு எதிரான நிலையை எடுத்தார் நடிகர் ஜெய். இவர் சிம்புவுக்கு தோஸ்த் என்பதால் இந்த ஸ்டாண்ட்.

இந்த நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டித் தள்ளியுள்ளனர் ட்விட்டர் மூலம்.

சிம்பு தனது ட்விட்டரில் எழுதியுள்ள லேட்டஸ்ட் செய்தியில், நண்பன் பட டிரெய்லர் பார்த்தேன். அதில் ஜீவாவின் நடிப்பு பிரமாதம். தோற்றமும் சிறப்பாக உள்ளது. படததில் சிறப்பாக நடித்ததற்காகவும், பிறந்த நாள் வாழ்த்துகளையும் ஜீவாவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஜீவா தேங்ஸ் சொல்லி சிம்புவுக்குப் பதிலளித்துள்ளார். அதில், பாராட்டுக்கு நன்றி, விரைவில் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜீவா.

அப்படீன்னா, இரண்டு பேரும் இனி 'நண்பேன்டா'வா...?

Comments