'மார்க்கெட் போய்டுச்சா... சேச்சே..!' - ஸ்ரேயா!!

Friday, January 06, 2012
தமிழில் தனக்கு மார்க்கெட் போய்விட்டதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் நடிகை ஸ்ரேயா.

ராசியில்லாத நடிகை என்ற லிஸ்டிலிருந்த ஸ்ரேயா, சிவாஜியில் ரஜினி ஜோடியாக நடித்ததன் மூலம் இந்தியாவின் பிரபல நடிகையாக மாறினார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என டாப் கியரில் போய்க் கொண்டிருந்தவர், இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் வடிவேலுவுடன் டூயட் பாடியதிலிருந்து சரிவுக்குள்ளானார்.

சமீப காலமாக அவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை. இப்போது அவருக்கு படங்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கடைசியாக ரௌத்திரம் படத்தில் நடித்தார். ஸ்ரேயா மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் புதுப் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்ட போது, "நான் பன்னிரெண்டு வருடமாக சினிமாவில் இருக்கிறேன். என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன் என்ற பெயரைப் பெற்றுள்ளேன்.

நல்ல நடிகைகளுக்கு மார்க்கெட் என்ற வரையறையே கிடையாது. எனக்கு மார்க்கெட் போய் விட்டது என்றும் படவாய்ப்புகள் இல்லை என்றும் சொல்லப்படுவதில் உண்மை இல்லை.

சினிமாவுக்கு வந்த புதிதிலும் எல்லா படங்களையும் ஒப்புக் கொண்டேன். சில படங்களில் தயாரிப்பாளர், இயக்குனர் வேண்டப்பட்டவராக இருந்ததால் நடித்தேன். இப்போது அப்படியெல்லாம் நடிக்க வேண்டிய அவசியமில்லையே. பணக்கஷ்டம் இல்லை. எனவே தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறேன்.

நல்ல கதைகளாக இருந்தால் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். இதை வைத்து எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று வதந்தி பரப்புகிறார்கள். எனக்கு நிற்க நேரமில்லாத அளவுக்கு வேலை. ஒரு பாட்டுக்கு ஆடுவது, விளம்பரங்கள், நிகழ்ச்சிகள், சேவை அமைப்புகள் என நான் ரொம்ப பிஸி," என்றார்.

நல்ல கதை இல்லாததால படங்களில் நடிக்கவில்லை என்கிறீர்கள்.... ஒத்தப் பாட்டு, குத்துப் பாட்டெல்லாம் எதில் சேர்த்தி?!

Comments