நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய சினிமா டைரக்டர்-தயாரிப்பாளர் கைது: வாடிக்கையாளர் போல் புகுந்து போலீஸ் மடக்கி பிடித்தது!

Friday, January 06, 2012
சென்னை::சென்னையில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய் குமார்சிங் ஆகியோர் உத்தர விட்டனர்.

அதன்படி மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர் ராதிகா, கூடுதல் துணை ஆணையாளர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ ஆகியோர் சென்னையில் சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு வரும் பெண்களை ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல் பேசினார்கள்.

மறுமுனையில் பேசிய நபர் தன்னிடம் அழகான இளம் துணை நடிகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட இடத்திற்கு ரூ. 10 ஆயிரத்துடன் வந்தால் அழைத்து செல்வதாக கூறினார். சரி என்று வாடிக்கையாளர் போல் சென்ற விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரை தி.நகரில் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.

அவர்களை பின் தொடர்ந்து சென்ற விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் அந்த நிறுவனத்தில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பிறகு அதிரடியாக புகுந்து அங்கு விபசாரம் நடத்தி வந்த செல்வநாயகன் (54) மற்றும் அவரின் உதவியாளர் ஞானபிரகாசம் (64) ஆகியோரை கைது செய்தனர்.

அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த 2 இளம் பெண்களை மீட்டனர். விசாரணையில் செல்வ நாயகன் தேவ்ஆனந்த் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா படம் தயாரிப்பதாகவும், சில படங்களுக்கு துணை இயக்குனராக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது “போசதே” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்குவதாகவும் கூறினார். இதே போல் சினிமாவில் துணை நடிகையாக நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாக சென்னை ஆழ்வார் திருநகரில் ஒரு அபார்ட் மெண்டில் 3 இளம்பெண் களை தங்க வைத்து விபசார தொழில் செய்து வந்த சினிமா துறையில் ஒவியராக வேலை செய்து வந்த நாகேந்திரன் (50) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சினிமா மேக்கப்மேன் கண்ணதாசன் (30) என்பவர்களையும் கைது செய்தனர்.

அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த சென்னையைச் சேர்ந்த 3 இளம்பெண்களும் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சைதாப் பேட்டை 4-வது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப் பட்ட இளம்பெண்கள் மயிலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள்.

Comments