பிப்ரவரி 3ம்தேதி ஜெனிலியா-ரித்தேஷ் திருமணம்!!!

நடிகை ஜெனிலியாவுக்கும், அவரது காதலர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் வருகிற பிப்ரவரி 3ம்தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஜெனிலியாவும், ரித்தேசும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம் வருகிற பிப்ரவரி 3ம்தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் திருமணத்திற்கு முன்னதாக வரும் 31ம்தேதி நிச்சயதார்த்த சடங்குகள் நடைபெற உள்ளன.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 4ம்தேதி நடைபெறுகிறது. இந்த மங்களகரமான நிகழ்ச்சியில் இந்தி, தமிழ், தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள், பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். திருமணத்துக்கு பின் ஜெனிலியா சினிமாவில் நடிக்கமாட்டார் எனத் தெரிகிறது. அவர் சினிமாவில் நடிப்பதை மணமகனின் தந்தையும், மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் விரும்பவில்லை என்பதால் இந்த முடிவை ஜெனிலியா எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments