நடிகர் மன்சூர்அலிகான் கைது:ரூ. 1 கோடி நில மோசடி!

Friday, January 06, 2012
சென்னை::சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர் துரைவேலன். இவர் நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் அரும்பாக்கம் புலியூர் பகுதியில் தனக்கு சொந்தமான ரூ. 1 கோடி நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நடிகர் மன்சூர்அலிகான் அபகரித்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் நில மோசடிப் பிரிவு உதவி கமிஷனர் ஜேசுராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டுக்கு போலீசார் சென்று கைது செய்தனர்.

பின்னர் மன்சூர்அலிகானை வேனில் ஏற்றி போலீஸ் கமிஷனர் அலுவலத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Comments