ஒரே படத்தில் 99 பாடல்கள் - ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்!!!

12th of August 2015
சென்னை:இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கதையாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார். பாடகர் ஒருவரைப் பற்றிய கதை ஒன்றை எழுதியுள்ள ரஹ்மான், அப்படத்திற்காக தனது இசையில் 99 பாடல்களை உருவாக்க உள்ளாராம்.

தமிழ் மற்றும் இந்தியில் வெளியாக உள்ள இப்படம், பல்வேறு சோதனைகளை சந்திக்கும் ஒரு பாடகர், அனைத்தையும் சமாளித்து எப்படி ஒரு சிறந்த இசையமைப்பாளராக உருவெடுக்கிறார், என்பதை சொல்லும் விதமாக உருவாகிறது.
தற்போது, இந்தி படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வரும் ரஹ்மான், அப்படங்களின் பணிகள் முடிவடைந்ததும், இப்படத்தின் பணிகளில் ஈடுபட உள்ளார்.
கலை சம்மந்தமான படமாக உருவாகும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

Comments