உதயநிதியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அனிருத்!!!

8th of September 2014
சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி இசைப்பாளர்களில் ஒருவராக திகழும் கோல வெறி அனிருத், கதி, ஆகோ, கக்கிச் சட்டை, நானும் ரவுடிதான், உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இதற்கிடையில், நன்பேண்டா படத்தில் நடித்து வரும் உதயநிதி, அடுத்ததாக 'என்றென்றும் புன்னகை' படத்தை இயக்கிய அகமது, இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தை உதயநிதியே தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். அப்போது சம்பளம் குறித்து ஏதும் பேசாத அனிருத், தற்பொது சம்ப்பளம் குறித்து உதயநிதியிடம் பேசினாராம். அனிருத்தின் சம்பளத் தொகையைக் கேட்ட உதயநிதி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டாராம்.

ஆம், அனிருத் ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக தகவல வெளியாகியுள்ளது. சீனியர் இசையமைப்பாளர்கள் வாங்கும் தொகையை கேட்கிறாரே என்று அதிர்ச்சியடைந்த உதயநிதி, பேச்சுவார்த்தைக்கு பிறகு சில லசங்க்களை குறைத்து முடிவில் ஒன்றரை கோடி சம்பளம் கொடுப்பதாக சம்மதித்துள்ளாராம்.

Comments