அஜீத், விஜய், சூர்யா முதலான முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாராம் ஆண்ட்ரியா!!!

8th of September 2014
சென்னை:கெளதம்மேனனின், 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் சரத்குமாருடன் நடித்தவர் ஆண்ட்ரியா. அதன்பிறகு கோடம்பாக்கத்தின் குறிப்பிடத்தக்க முன்னணி ஹீரோயினிகளில் தானும் ஒருவராகி விடுவோம் என்று எதிர்பார்த்த ஆண்ட்ரியாவுக்கு அதன்பிறகு நடித்த ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா போன்ற படங்கள் கைகொடுக்கவில்லை. அதனால் பின்தங்கியே இருந்தார்.

இருப்பினும், விஸ்வரூபம் படம் மூலம் கமல் கைகொடுத்ததால், அவரது சினிமா பயணத்தில் திடீரென்று விறுவிறுப்பு கூடியிருக்கிறது. அதையடுத்து, விஸ்வருபம்-2, உத்தமவில்லன் என்ற வரிசையாக நடித்த ஆண்ட்ரியா கமலுடன் 3 படங்களில் நடித்து விட்டார். அதையடுத்து, தரமணி படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இதோ இந்த படத்திற்காக ஒரு பாடலையும் தானே ஆங்கிலத்தில் எழுதி கம்போஸ் செய்து பாடியிருக்கிறார்.

இதையடுத்து, வலியவன், அரண்மனை படங்களில் நாயகியாக நடித்துள்ள ஆண்ட்ரியா பூஜை, இது நம்ம ஆளு போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இப்படி பல படங்களை கைவசம் வைத்து பிசியாக நடித்து வந்தபோதும், ஆண்ட்ரியா எதிர்பார்க்கிற அந்த மேல்தட்டு ஹிரோக்களின் அணுக்கிரகம்தான் அவருக்கு இன்னமும் கிடைக்கவில்லை.

அதனால் தனது சினிமா நண்பர்களிடம் சொல்லி புலம்பி வரும் ஆண்ட்ரியா, இதுவரை அதற்கான பிரத்யேக முயற்சிகளில் இறங்காதபோதும், தற்போது கமலுடன் நடித்துள்ள விஸ்வருபம்-2, உத்தமவில்லன், தரமணி போன்ற படங்கள் வெளியாகும்போது அஜீத், விஜய், சூர்யா முதலான முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாராம். ஒருவேளை அந்த வாய்ப்புகள் தேடிவரவில்லை என்றால், தானே அதிரடி முயற்சிகளில் இறங்கவும் திட்டம்

Comments