ஆர்யாவுக்கு பெண்களை உஷார் பண்ணுவது எப்படி என்றொரு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளாராம். பார்த்திபன்!!!

15th of August 2014
சென்னை:கோடம்பாக்கத்தின் பிக்கப் மன்னன் என்று பெயரெடுத்திருப்பவர் ஆர்யா. எந்த மாநிலத்தில் இருந்து புதுமுக நடிகைகள் கோலிவுட்டிற்குள் நுழைந்தாலும் அவர்களை எளிதாக மடக்கி பிக்கப் செய்து விடும் ஆர்யா, பின்னர் அவர்களை டிராப் பண்ணுவதே இல்லை என்று பார்த்திபன் உள்ளிட்ட பலரும் அவர் மீது புகார் கூறி வருகிறார்கள்.
 
இப்படிப்பட்ட சூழ்நிலையில, ஆர்யாவை பல மேடைகளில் பெண்களின் மனம் கவர்ந்தவர், நடிகைகளின் ரியல் ஹீரோ என்று எக்கச்சக்கமாக சொல்லி அவரை குளிப்பாட்டி வந்த பார்த்திபன், தனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தமைக்காக ஆர்யாவுக்கு பெண்களை உஷார் பண்ணுவது எப்படி என்றொரு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளாராம்.
 
ஏற்கனவே பெண்களை உஷார் பண்ணுவதில் மன்னரான ஆர்யாவுக்கே இப்படியொரு புத்தகத்தை கொடுத்திருப்பதின் காரணம், இன்னும் அவர் அதுபற்றி அறியாத பல அரிய விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானாம். அதையடுத்து அந்த புத்தகத்தை படித்த ஆர்யா, இத்தனை நாளும பெண்களை கவருவது எப்படி என்ற எல்லா விசயமும் எனக்குத் தெரியும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது பார்த்திபன் சார் கொடுத்த புத்தகத்தை படித்த பிறகுதான், இன்னும் நான் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் எவ்வளவோ இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார் ஆர்யா.

Comments