சற்குணம் படத்திலிருந்து விலகினார் ஜிப்ரான்!!!

Untitled-1
12th of June 2014
சென்னை:சற்குணம் இயக்கிய ‘வாகை சூட வா’ படத்தின் அறிமுகமாகி மூலம் ரசிகர்களின் இதயங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். தொடர்ந்து அவரது ‘நய்யாண்டி’ படத்துக்கும் இசையமைத்தார். அடுத்து மூன்றாவது முறையாக பாலா தயாரிப்பில் சற்குணம் இயக்கவுள்ள புதிய படத்திற்கும் அவர்தான் இசையமைப்பதாக இருந்த்து. ஆனால்  தற்போது அந்த படத்திலிருந்து ஜிப்ரான் பின்வாங்கிவிட்டார் என கூறப்படுகிறது..
காரணம் ஜிப்ரானின் பிஸியான ஷெட்யூல் தான். மற்றபடி கருத்துவேறுபாடு எதுவுமில்லையாம்.. கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’வுக்கு பின்னணி இசையமைத்த ஜிப்ரானின் பாணி கமலை மயக்கிவிட, தான் அடுத்து நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் தந்துள்ளார். இதுதவிர ‘அமரகாவியம்’ உட்பட இன்னும் சில படங்கள் அவர் கைவசம் உள்ளன.
 
சற்குணமோ தான் இயக்கும் படத்தை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டிருக்கிறார். அதற்கு ஜிப்ரானின் பிஸி ஷெட்யூல் இடம் தரவில்லை. இதை சற்குணத்திடம் தெளிவாக விளக்கிவிட்டுத்தான் இந்தப்படத்தில் இருந்து வெளியேறியுள்ளாராம் ஜிப்ரான்.

Comments