உதவியாளருக்காக பாட்டு எழுதி பாடினார் மிஸ்கின்!!!

18th of February 2014சென்னை::மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜே.வடிவேல் என்பவர் தற்போது‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். கடந்த நவம்பர் 21ஆம் தேதி துவங்கிய இந்தப்படத்தின் துவக்கவிழாவில் கலந்துகொண்டு. படத்தின் மூன்று காட்சிகளை இயக்கி படத்தை துவக்கி வைத்தார் மிஸ்கின்..
 
சினிமா பின்னணியை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருக்கும் இந்தப்படத்துக்கு ‘யுத்தம் செய்’ படத்திற்கு இசையமைத்த ‘கே’ இசையமைக்கிறார். இதில் ‘வெள்ளக்கார ராணி’ என்ற பாடலை எழுதியுள்ளதோடு அதை பாடியும் இருக்கிறார் மிஸ்கின்.
 
45 நாட்களில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ள இயக்குனர் வடிவேல் இந்தப்படத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாக கூத்து கலையை அறிமுகப்படுத்தியுள்ளார்..::
tamil matrimony_HOME_468x60.gif

Comments