எதிர்நீச்சல் இயக்குநருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்!!!

6th of November 2013
சென்னை::'எதிர்நீச்சல்' படத்தின் மூலம் ஓப்பனிங் வசூல் ஹீரோவான சிவகார்த்திகேயன், தனது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அதை நிலைநிறுத்திக்கொண்டார்.

தற்போது எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு 'டாணா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் திரைக்கதையை பட்டுக்கோட்டை பிரபாகரன், இயக்குநர் துரை செந்தில்குமார் இணைந்து எழுதியுள்ளார்கள்.

டாணா என்பது தமிழ் வார்த்தைதான் என்று சொல்லும், பட்டுக்கோட்டை பிரபாகாரான், டாணாக்காரன் என்றால் காவல்காரன் என்று அர்த்தம் என்று தலைப்புக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்.

தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பது யார்?, நாயகி யார்? என்பதையெல்லாம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments