ஓவியாவின் சபதம் எக்ஸ்பயரி!!!

6th of November 2013
சென்னை::சினிமா சபதம் சில நாட்களுக்குதான் போலிருக்கிறது. ஜில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட கசப்புணர்வால் அப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ஓவியா சுட சுட பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். இனிமேல் இரண்டு கதாநாயகி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்பதுதான் அந்த பேட்டியின் சாரம்சம்.
 
ஏன்? இதில் இன்னொரு நாயகியாக நடித்த தீபாஷாவின் கேரக்டரை பெரிதாக காட்டிவிட்டு தன் கேரக்டரை சுருக்கிவிட்டார்கள் என்பது அவரது குற்றச்சாட்டு. இத்தனைக்கும் கதை சொல்லும்போது நல்லாதான் சொல்றாங்க. படமா பார்க்கும் போதுதான் இப்படி நடந்து விடுகிறது என்பது அவரது பெருமூச்சு. அந்த பிடிவாதமெல்லாம் போயே போச்சு இப்போது. கிருஷ்ணா இயக்கும் இருக்கு ஆனா இல்ல என்றொரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அவர்.
 
இதில் ஓவியாவுடன் இன்னொரு நாயகியும் நடிக்கிறாராம். இருந்தாலும் பொருத்துக் கொண்டு நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ஓவியம். சபதம் என்னாச்சு? கதை நல்லாயிருக்கு. அதைவிட எனக்கான கேரக்டர் அருமையா இருக்கு. டைரக்டர் சொன்னதை செய்வார்னு நம்பிக்கையும் இருக்கு என்கிறார் அவர். நம்பிக்கைதானே வாழ்க்கை
tamil matrimony_HOME_468x60.gif

Comments