ஹீரோயினுக்கு தமிழ் வாத்தியாரான சிவகார்த்திகேயன்!!!

13th of September 2013
சென்னை::'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள ஸ்ரீ திவ்யா, ஆந்திராவைக் சேர்ந்தவர். இந்த படத்தில் ஒப்பந்தமாகும் பொது அம்மணிக்கு, சுத்தமாக  தமிழ் தெரியாது. ஆனால், தற்பொது கொஞ்சம் சுமாரான தமிழில் பேசுகிறார்.

எப்படி என்று யோசிப்பதைவிட, யார் தமிழ் கற்றுக்கொடுத்தார்கள், என்று அவரிடமே கேட்டதற்கு,"எல்லாம் புகழும் சிவனுக்கே" என்று சொல்கிறார். சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யாவுக்கு தமிழ் மட்டும் பல படப்பிடிப்பு தளத்தில் அவ்வப்போது நடிப்பு குறித்து சில டிப்ஸ்களையும் கொடுத்து உற்சாகப்படுத்தினாராம்.

இது குறித்து கூறிய ஸ்ரீ திவ்யா, "  வாலிபர் சங்கம் படத்தில்  பாவாடை தாவணி அணிந்து, கிராமத்து கெட்டப்பில் நடித்தது சந்தோஷமாக  இருந்தது. என்னை மாடர்ன் டிரஸ்சில் பார்த்தவர்கள், நான், கிராமத்து கெட்டப்புக்கு மாறியதும், இப்போதுதான், நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று வர்ணித்தனர். அதிலும் சிவகார்த்திகேயன், ஊதா கலரு ரிப்பன் பாடலை அடிக்கடி பாடி, என்னை கிண்டல் செய்து கொண்டேயிருந்தார். மேலும், தெலுங்கு பெண்ணான எனக்கு, தமிழ் கற்றுக்  கொடுத்ததே அவர் தான். நடிப்பிலும், நிறைய உதவி செய்தார்." என்று சிவகார்த்திகேயனை என்று புகழ்கிறார்.

Comments