சுந்தர்.சி கொடுத்த வாய்ப்பு - ஹன்சிகா உற்சாகம்!!!

13th of September 2013
சென்னை::ஒரு  கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2,  தீயா வேலைசெய்யணும் குமாரு என்று தொடர் வெற்றிப் படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, சமீபத்தில் தனது காதலை பகிரங்கமாக அறிவித்தாலும், அவருடைய சினிமா வாழ்க்கையில் அது எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. எப்போதும் போல தொடர் வாய்ப்புகளைப் பெற்று வரும் ஹன்சிகா, தற்பொது மேலும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

அந்த சந்தோஷத்திற்கு காரணம், அவருடைய அடுத்தப் படம் தானாம். சுந்தர்.சி, தற்பொது திகில் படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ஹன்சிகாதான் ஹீரோயின். இப்படத்தில் மேலும் சில நடிகைகள் நடித்தாலும், கதையே ஹன்சிகாவை சுற்றிதான் நடக்கிறதாம்.

இப்படம் குறித்து கூறிய ஹன்சிகா, " என், அடுத்த படம் குறித்து, பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அவை எல்லாம் உண்மையில்லை. தீயா வேலை செய்யணும் குமாருபடத்துக்கு பின், மீண்டும், சுந்தர். சி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அவருடன் பணியாற்றுவது, இனிமையான அனுபவம். இந்த படம், ஹீரேயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். படத்தின் கதையே, என்னைச் சுற்றித் தான் நககிறது. இதனால், என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்கு, எனக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது." என்றார்.

அப்போ, அடுத்த தேசிய விருது ஹன்சிகாவுக்கு கன்பார்ம் போல! 

Comments