சென்னையில் நடந்த சிசிஎல் பார்ட்டிக்கு வந்த விஜய், நயன்தாரா!!!

Thursday,7th of March 2013
சென்னை::சென்னையில் நடந்த சிசிஎல் பார்ட்டியில் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிசிஎல் 3வது சீசன் சென்னை அணிக்கு ராசியில்லாததாகிவிட்டது. இந்த சீசனில் சென்னை அணி வெளியேறிவிட்டது. இந்நிலையில் அண்மையில் சென்னையில் சென்னை ரைனோஸ் அணிக்கு ஒரு பார்ட்டி கொடுக்கப்பட்டது. அந்த பார்ட்டிக்கு இளைய தளபதி விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வந்திருந்தார்.

அடுத்து அழகுச் சிலை நயன்தாரா வந்திருந்தார். பார்ட்டியில் ஷாம், விஷால், பரத், சோனியா அகர்வால், கன்னட நடிகரும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி கேப்டனுமான சுதீப், கர்நாடகா அணியின் உரிமையாளர் அசோக் கெனி, விக்ராந்த், ஜீவா, விஷ்ணு, ஆர்யா, ஜே ரமேஷ், ஷிவா, சாந்தனு, ரமணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments