நயந்தாராவைப் பார்த்து கண்ணடித்தார்! ஷூட்டிங் ஸ்பாட் பரபரப்பு!!!

Wednesday,21st of November 2012
சென்னை::நீங்க கேட்கும் சம்பளம் தருகிறோம். நீங்க நடிச்சா மட்டும் போதும் என பல இயக்குனர்களும் பல தயாரிப்பாளர்களும் கேட்டிருந்தாலும் தனக்கு சரியென தோன்றும் சில படங்களில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டவர் நடிகை நயன்தாரா. காதல், திருமணம் வரை சென்று பின் ஏற்பட்ட சில பல கசப்பான சம்பவங்களை மறக்க சினிமாவிற்கு வந்த நயன்தாராவின் மனக்கஷ்டம் இங்கு வந்த பிறகு மேலும் அதிகரிக்கச் செய்ததாம்.


நயன்தாராவின் பழைய வாழ்க்கையை பற்றி மறுபடியும் மறுபடியும் கேட்கப்படுவதால் எங்கு வந்தாலும் முகத்தை கடினமாக வைத்திருக்கிறார் நயன்தாரா. ஆர்யாவுடன் ஜோடியாக அட்லீ

குமார் இயக்கத்தில் ராஜா ராணி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. ராஜா ராணி பட ஷூட்டின் பெசண்ட் நகர் கடற்கரை அருகில் நடந்துகொண்டிருக்கிறது. நேற்று(19.11.12) இரவு ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரை நயன்தாரா பிடிக்க சொல்ல, யூனிட் ஆட்களும் ஓடிப்போய் பிடித்துள்ளனர்.

பிடிபட்டவரிடம் மன்னிப்பு கேட்குமாறு நயன்தாரா சொல்ல, மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது ’நீ என்ன பாத்த நான் உன்ன பாத்தேன்’ என மரியாதைக்குறைவாக பேசினாராம். இதை கேட்ட யூனிட் மெம்பர்கள் அந்த நபரை வெளுத்து வாங்க, அவரோ ‘என் மேலயா கைய வெச்சீங்க. எப்படி ஷூட்டிங் நடக்குதுனு நான் பார்க்கிறேன்’ என கோவமாக பேசிவிட்டு ஓடிவிட்டாராம்.

அதிகாலை 4 மணிவரை ராஜா ராணி படப்பிடிப்புத் தளம் பரபரப்பாக இருந்ததாம். யூனிட் மெம்பர்களோ அந்த நபர் நயன்தாராவைப் பார்த்து கண் அடித்ததாக கூறிகின்றனர். உண்மையில் என்ன நடந்தது என்பது நயன்தாராவிற்கும் அந்த அடிவாங்கிய நபருக்கும் மட்டுமே தெரியும். தனது ஆல் இன் ஆல் மேக்கப் மேனை வேலையை விட்டு நிறுத்திவிட்ட சோகத்தில் இருக்கும் நயன்தாராவிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி படக்குழுவினரிடமும் எச்சரித்துள்ளார்களாம்.

Comments