
யாருடனும் ஈகோ இல்லை என்று சாந்தனு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது ‘அமளி துமளி’ படத்தில் நடித்து வருகிறேன். நான், நகுல், சுவாதி ஆகியோருக்கு இடையேயான பிரச்னைதான் படம். கதையை விட மூவரின் கேரக்டர்கள்தான் பேசப்படுவதாக இருக்கும். சிறப்பான கேரக்டர் இது. இன்னொரு ஹீரோவுடன் இணைந்து நடிப்பதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. யாருடனும் ஈகோவும் இல்லை. இனி சினிமா பார்க்க வருபவர்கள் மல்டி ஸ்டார் படத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் யாருடனும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்.
Comments
Post a Comment