
'சித்திரம் பேசுதடி', 'நெஞ்சிருக்கும் வரை', 'அஞ்சாதே', போன்ற படங்களில் நடித்த நரேன் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் 'முகமூடி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் 'தம்பிக்கோட்டை' படத்திற்கு பிறகு மீண்டும் ஹீரோவாக தமிழ் படத்தில் களம் இறங்குகிறார். இப்படத்தை 'முரண்' டைரக்டர் ராஜன் மாதவ் இயக்குகிறார். மேலும் படத்தில் நரேன் உடன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னாவும் நடிக்கவுள்ளார்.
Comments
Post a Comment