தயாரிப்பாளர்கள் உயிருக்கு ஆபத்து : போலீஸ் கமிஷனரிடம் இப்ராஹிம் ராவுத்தர் மனு!!!

Wednesday,April,18, 2012
சினிமா தயாரிப்பாளர்கள் இப்ராஹிம் ராவுத்தர், கேயார், முக்தா சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு கொடுத்தனர். பின்னர் இப்ராஹிம் ராவுத்தர் நிருபர்களிடம் கூறியதாவது: பெப்சி, சினிமா தயாரிப்பாளர்களிடையே நடந்த பிரச்னையில் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாக எஸ்.ஏ.சந்திர சேகரன், தேனப்பன், கலைப்புலி தாணு ஆகியோரை 6 மாத காலத்திற்கு நீக்க¤யுள்ளோம். இந்நிலையில் இடைக்கால தலைவராக என்னை உறுப்பினர்கள் நியமித்துள்ளனர். 3 பேரை நீக்கியதால், எங்கள் உறுப்பினர்களுக்கு அடியாட்கள் மூலம் ஆபத்து வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே எங்கள் உறுப்பினர்களுக்கு போலீசார் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் தான் 3 பேரும் நீக்கப்பட்டுள்ளார்கள். அதற்கான அதிகாரம் இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments