
சென்னை::கோ படத்துக்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அஜ்மலுக்கு ஏமாற்றம். ஆனால் டோலிவுட்டில் அதே படம் டப்பிங் ஆகி ரிலீஸ் ஆனதில் ராம் சரண் தேஜா படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.
கிளாமராக நடிக்க மறுப்பதாக வரும் கிசுகிசுக்களை யாரும் நம்பாதீர்கள் எனக்கு அமைந்த வாகை சூட வா, மவுன குரு என இரு படங்களிலும் அதுபோல் வாய்ப்பு அமையாததால் நடிக்கவில்லை எனக் கூறும் இனியா, மற்ற ஹீரோயின்களுக்கு போட்டியாக கிளாமராக நடிப்பாராம்.
சிங்கக்குட்டி படத்தில் நடித்த சிவாஜி பேரன் ராம்குமார் கணேசன் அடுத்து புதுமுகங்கள் தேவை என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
தோனி படத்தையடுத்து புதிய படம் இயக்கவுள்ள பிரகாஷ்ராஜ் அதன் ஸ்கிரிப்ட் தயாரிப்பதற்காக பாங்காக் சென்றிருக்கிறார்.
சுந்தர் சி இயக்கும் மசாலா கபே படத்தில் பல காட்சிகளில் தொப்புள் தெரிய கிளாமர் வேடத்தில் நடிக்கிறாராம் களவாணி பட ஹீரோயின் ஓவியா.
Comments
Post a Comment