
அமீரின் நடவடிக்கைதான் அலெக்ஸ் பாண்டியன் படத்துக்கு எதிராக பெப்சி தொழிலாளர்களை திருப்பிவிட்டது என தயாரிப்பாளர்கள் தரப்பு நம்புகிறது. இதனால் அவரின் ஆதிபகவான் படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.
ஜெயம் ரவி, நீது சந்திராவை வைத்து ஆதிபகவான் என்ற படத்தை அமீர் பல வருடங்களாக இழுத்துக் கொண்டு... ஸாரி எடுத்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு இப்போதுதான் சூடுபிடித்து முடிவுறும் நிலையை எட்டியுள்ளது. அமீரின் போக்கு காரணமாக கடுப்பான தயாரிப்பாளர்கள் அமீரின் எந்தப் படத்துக்கும் நாங்களோ, திரையரங்கு உரிமையாளர்களோ ஒத்துழைப்பு தரப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
அதாவது படத்தை முடித்தாலும் நாங்க அதனை திரையிட மாட்டோம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். அமீர் என்ன செய்யப் போகிறார்?
Comments
Post a Comment