
சமுத்திரம்’ படத்தின் கன்னட ரீமேக்கில், காவேரி நடித்த தங்கை கேரக்டரில் நடித்து வருகிறார் சரண்யா மோகன். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘சமுத்திரம்’ எனக்கு மிகவும் பிடித்த படம். பத்து முறையாவது பார்த்திருப்பேன். அதன் ரீமேக்கில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதிலும் காவேரி கேரக்டர் பவர்புல்லானது. படத்தை பலமுறை பார்த்திருந்தாலும் காவேரியை காப்பி அடிக்கவில்லை. எனது ஸ்டைலில் நடித்து வருகிறேன். இதுதவிர நான் நடித்த இன்னொரு கன்னடப்படம் விரைவில் வெளிவருகிறது. மலையாளத்தில் அப்பா மகள் உறவை சித்தரிக்கும் ‘பேரினொரு மகன்’ என்ற படத்தில் நடிக்கிறேன். தமிழில் இரண்டு கதைகளுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறேன். இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
Comments
Post a Comment