எந்த ஜென்மத்திலும் அப்பாவுடன் பேசமாட்டேன்: பானு!!!

Sunday, March 11, 2012
நடிகை பானு தனது அப்பாவைவிட்டு பிரிந்துவிட்டாராம். இனி எந்த ஜென்மத்திலும் அவருடன் பேசப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

தாமிரபரணி படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் நடிகை பானு. முதல் படத்தில் கும்முனு வந்த அவர் அடுத்தடுத்த படங்களில் காற்றிறங்கிய பலூனாகி விட்டார். குறிப்பாக ஆர்கேவுடன் இணைந்து நடித்தபோது படு மெல்லிசாக காணப்பட்டார். இப்போது முன்பை விட மேலும் உடல் மெலிந்து காணப்படுகிறார். கேட்டால் டயட்டிங் என்கிறார்.

என்ன பானு உங்களை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்று கேட்டால் எனக்கு கதாபாத்திரம் தான் முக்கியம். அதனால் தான் வரும் படங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளாமல், நல்ல கதாபாத்திரம் உள்ள கதைகளில் நடித்து வருகிறேன் என்றார்.

அம்மணி கேரளாவில் ஒரு பியூட்டி பார்லர் திறந்து அதை தனது அம்மாவின் பொறுப்பில் விட்டுள்ளார். இந்நிலையில் பானுவுக்கும் அவரது அப்பாவுக்கும் என்ன லடாயோ தெரியவில்லை தகப்பனை விட்டுப் பிரிந்துவிட்டார். இனி எந்த ஜென்மத்திலும் அவருடன் பேசவே மாட்டேன் என்கிறார். இனி எனக்கு எல்லாமே அம்மா தான் என்றும் கூறியுள்ளார்.

அப்பா மீது அப்படி என்ன கொலவெறியோ தெரியலையே...!

Comments