
தமிழில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' தெலுங்கில் 'ஸ்ரீராமராஜ்யம்' ஆகியப் படங்களை தனது கடைசிப் படங்களாக அறிவித்த நயன்தாரா, மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறார். தெலுங்கு முன்னணி ஹீரோவான கோபிசந்த், முதன் முறையாக ஹீரோவாக நடிக்கும் தமிழ்ப் படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை பூபதிபாண்டியன் இயக்க, ஜெயபாலாஜி ரியல் மீடியா (பி) லிமிடெட் சார்பில் கோமரி வெங்கடேஷ், தண்டரா ரமேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் கமர்ஷியல், சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்குப் பிறகு புத்தம் புது பொலிவோடு நயன்தாரா நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல மாதம் சென்னையில் துவங்க இருக்கிறது.(
Comments
Post a Comment