
முன்னணி இயக்குனர் ஷங்கர் 'நண்பன்' படத்தின் வெற்றிக்கு பின் அடுத்த படம் பற்றிய ஆலோசனையில் இருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் படைப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் புதிய படம் தயாராகிறது.
இப்படத்திற்காக முதலில் நடிகர் விக்ரம் நடிப்பதாக தகவல் இருந்தது. ஆனால் சில காரணங்களால் விக்ரமிற்கு பதிலாக நடிகர் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று புதிய தகவல் வந்துள்ளன.
மேலும், இந்த படத்தில் விஷேசம் என்னவென்றால்..? ஆசியாவின் முன்னணி ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். மொத்தத்தில் ஆசியா சூப்பர் ஸ்டார் ஜாக்கிஜானும், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இணைந்து சூர்யாவின் படத்தில் நடிக்கின்றனர்.
ரஜினி, ஜாக்கிசான், சூர்யா, இயக்குனர் ஷங்கர் ஆகியோர் ஒரே கூட்டணியில் இணைவதால், இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
Comments
Post a Comment