
நடிகை விந்தியாவுக்கும் கோபி என்ற கோபாலகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக குடும்ப நலகோர்ட்டில் விந்தியா விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அதன் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் விந்தியாவும் கோபியும் இன்று முதன்மை குடும்ப நல கோர்ட்டில் ஆஜராகி பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள மனு தாக்கல் செய்தனர். விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. விவாகரத்து மனுவை தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த விந்தியா, கோபியுடன் கருத்துவேறுபாடு இருக்கின்ற காரணத்தால் இருவரும் கூடி பேசி பிரிவது என்றும் விவாகரத்து பெற்றுக் கொள்வதென்றும் முடிவு செய்ததாக கூறினார். விவாகரத்துக்கு பின் மீண்டும் மறுமணம் உண்டா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். இவருடைய கணவர் கோபி பிரபல நடிகை பானுப்பிரியாவின் சகோதரர் என்பது அனைவரும் அறிந்ததே.
Comments
Post a Comment