மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 3 படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு!!!

Wednesday,March,28,2012
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 3 படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி இருக்கும் முதல் படம் 3. தன்னுடைய முதல்படத்‌திற்கே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டார் ஐஸ்வர்யா தனுஷ். இதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் உள்ள கொலவெறி பாடல் தான். புதுமுகம் அனிருத் இசையமைப்பில், தனுஷே எழுதி, பாடியிருக்கும் இப்பாட்டு வெளியான இதுநாள் வரை கிட்டத்தட்ட 50 மில்லியன் பேர் வரை பார்த்து ரசித்துள்ளனர். மார்ச் 30 முதல் உலகெங்கும் ரிலீஸாக ஆக இருக்கும் 3 படத்தை சமீபத்தில், நடிகர் கமல்ஹாசனுக்கு பிரத்யேமாக திரையிட்டு காட்டியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். படத்தை பார்த்து பிரமித்து போன கமல், ஐஸ்வர்யாவின் இயக்கத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்.

Comments