
அவர் தாக்கல் செய்த மனுவில்,
டான்ஸ்மாஸ்டர் சுந்தரத்துக்கும் எனக்கும் 38 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனக்கு அவர் தாலி கட்டினார். ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினோம். பிறகு ஊருக்கு போய் விட்டு வருவதாக சொல்லி விட்டு போனார் அங்கு பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறி என்னிடம் வருத்தப்பட்டார்.
எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றபின் நான்கு மாதம் சேர்ந்து இருந்தார். அதன் பிறகு என்னை ஏமாற்றி விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.
என் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவர்தான் தந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனது மகன் தந்தையின் ஆதரவின்றி இருக்கிறான்.
பொருளாதார ரீதியாக நாங்கள் கஷட்டப்படுகிறோம். எங்களுக்கு நிவாரணம் கிடைக்க கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.
Comments
Post a Comment