
விமல், அஞ்சலி, ஓவியா நடிக்கும் 'மசாலா கபே' படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி. இதையடுத்து அவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில், மூன்று வேடங்களில் விஷால் நடிக்கிறார். இதுகுறித்து சுந்தர்.சி கூறியதாவது: 'மசாலா கபே' இறுதிக்கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. பிறகு விஷால் படம் இயக்குகிறேன். கதை விவாதம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏப்ரலில் ஷூட்டிங். தற்போது எந்தப் படத்திலும் நான் நடிக்கவில்லை. எனக்குப் பொருத்தமான வேடத்தில் நடிக்க கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
Comments
Post a Comment