
தமிழில் மீண்டும் நடிக்க இருப்பதாக ஷீலா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழ்ப் படங்களில் நடித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மலையாளத்திலும் நடிக்கிறேன். இரண்டு மொழிகளில் நடிப்பதால் தமிழில் கவனமாக படத்தை தேர்வு செய்ய வேண்டியது இருக்கிறது. இதனால் தமிழ் வாய்ப்புகளை தவிர்க்க வேண்டி வந்தது. தமிழில் கதை அம்சமுள்ள படங்கள் நிறைய வருகிறது. அவற்றில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்த ஆண்டு கண்டிப்பாக தமிழ் படத்தில் நடிப்பேன். தெலுங்கைப் போன்று தமிழிலும் எனக்கென்று தனி இடம் பிடிக்க ஆசை. இவ்வாறு ஷீலா கூறினார்.
Comments
Post a Comment