
இந்நிலையில், ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்‘ படம் தெலுங்கில் ஹிட்டானதை அடுத்து, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, ரவிதேஜா உள்ளிட்ட ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்கள், அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், நயன்தாரா பதிலேதும் சொல்லாமல் இருந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் மற்றும் ஹீரோக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, நயன்தாரா தெலுங்கில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் படத்தை தசரத் இயக்குகிறார். இதுபற்றி தசரத் கூறும்போது, ‘‘நயன்தாரா நடிப்பது உண்மைதான். நாகார்ஜுனா ஹீரோவாக நடிக்கிறார். மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது‘‘ என்றார். இப்போது நயன்தாரா நடிக்க உள்ள படத்துக்கு சம்பளமாக, ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக, பட யூனிட் தெரிவித்துள்ளது.
நயன்தாராவும் பிரபுதேவாவும் சேர்ந்து வாழ, சென்னை போட் கிளப் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியிருந்தனர். இப்போது அந்த வீட்டில் இருவரும் இல்லை என்று கூறப்படுகிறது. பிரபுதேவாவிடம் இருந்து சுமூகமாக பிரிந்துவிட்டதால்தான் நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்றும் தமிழ், தெலுங்கில் அவர் தொடர்ந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment