
தலைநகரம், மருமதலை, படிக்காதவன், மற்றும் மாப்பிளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ், அடுத்து கார்த்தி-அனுஷ்கா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். படுவேகமாக ஷூட்டிங் நடத்தி வரும் சுராஜ், அனுஷ்காவை புகழ்ந்து தள்ளியுள்ளார். இதற்கு அனுஷ்காவின் அதிகபடியான அழகு மட்டும் காரணம் அல்ல அவரது டெடிகேஷனும் தான். பெரிய ஹீரோயின் என்ற பந்தா இல்லாமல் ஷுட்டிங் தொடங்கும் முன்பே மேக்கப்புடன் முதல் ஆளாக ஆஜராகிவிடுவார். கார்த்தி, அனுஷ்கா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பெரும்பாலும் முதலில் மேக்கப்புடன் தயாராவது அனுஷ்காதான். படப்பிடிப்புக்கு இவ்வளவு டெடிகேட்டாக எந்த நடிகையும் வருவதில்லை என்று சுராஜ் அனுஷ்காவை புகழ்கிறார்.
Comments
Post a Comment