
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படம் இயக்க இருப்பதாக விவேக் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இதுவரை நான் நடித்த சில படங்களுக்கு நண்பர்களின் உதவியுடன் காமெடி டிராக் எழுதியுள்ளேன். இப்போது முதல்முறையாக படம் இயக்க ஸ்கிரிப்ட் எழுதியுள்ளேன். ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. கிராமத்தில் தறுதலையாக இருக்கும் இளைஞன், எப்படி தபால்தலையில் இடம்பெறுகிறான் என்பது கதை. காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் இருக்கும். தறுதலை இளைஞனாக நான் நடிக்கிறேன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.
Comments
Post a Comment