
விஸ்வரூபம் படத்திற்கு அடுத்தபடியாக தற்போது நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்கவுள்ளார் கமல். தமிழ் மற்றும் இந்தியில் உருவாக இருக்கும் இப்படத்தை கமலே இயக்கி, நடிக்க உள்ளார். இந்தியில் உருவாகும் படத்திற்கு "அமர் ஹெயின்" என்று பெயர் வைத்துள்ளார்.
இதுகுறித்து கமல் கூறுகையில், இந்தபடத்திற்கான கதையை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தயார் பண்ணிவிட்டேன். ஆனால் அப்போது அந்த படத்தை எடுக்க போதிய தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இப்போது அதற்கான நேரம் கூடி வந்துள்ளது. விஸ்வரூபம் படத்தை முடித்த பின்னர் இப்படத்தை எடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதனிடையே விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி சூட்டிங்கை கமல் முடித்துவிட்டாராம். இதனால் படத்தை மே மாதம் வெளியிட கமல் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment