
நடிகை நமீதா தற்போது மும்பையைச் சேர்ந்த வக்கீல் ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறாராம். நமீதா,அவரது முன்னாள் பாய் பிரெண்ட் பரத் கபூருடன் ஏற்பட்ட மனக்கசப்புக்குப் பின்னர் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் வக்கீல் ஒருவரின் காதல் வலையில் விழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
அண்மைக்காலமாக திரைப்படங்களில் நமீதாவிற்கு அதிக வாய்ப்பு இல்லை. இதனால் நமீதா கட்டுமான தொழிலதிபராக மாறினார். மும்பையில் ஒரு பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அவரது பணத்தை முதலீடு செய்துள்ளாராம் நமீதா. நமீதாவின் இந்த பிசினஸ் விஷயங்களில் அறிவுரை கூறி, ஆலோசனை வழங்கி எல்லா முயற்சிகளிலும் கூடவே இருந்து நல்வழி காட்டிய மும்பையைச் சேர்ந்த அந்த இளம் வக்கீல் தான் தற்போது நமீதாவின் மனம் கவர்ந்த காதலர் எனக் கூறப்படுகிறது. விரைவில் நமீதாவுக்கு டும் டும் டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment