பட விழாவில் பரபரப்பு : மனிஷா கொய்ராலா போதையில் ஆட்டம்!
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
பட தொடக்க விழாவில் பங்கேற்ற மனிஷா கொய்ராலா போதையில் தள்ளாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘உயிரே’, ‘பாபா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘இந்தியன்’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் தாஹல் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் மணந்தார். கடந்த ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் கணவர் சாம்ராட்டை பற்றி விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். ‘என் கணவர் எனக்கு எதிரியாகிவிட்டார்.
ஒரு பெண்ணுக்கு இதைவிட கொடுமை என்னவிருக்கிறது’ என்று விரக்தியுடன் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இருவரும் பிரியும் சூழல் உருவானது. இருகுடும்பத்தாரும் தலையிட்டு பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைத்தனர். இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் ரோஹித் ராய்யின் புதிய படமான ‘ஷாவுகீன்’ தொடக்க விழா நடந்தது. இதில் மனிஷா கலந்துகொண்டார். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் தள்ளாடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை கைதாங்கலாக அங்கிருந்து அழைத்து சென்றனர்.
Comments
Post a Comment