
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக திரையரங்குகளில் ஆறு நாட்களுக்கு, தினசரி, 5 காட்சிகள் நடத்திக் கொள்ள, அரசு அனுமதி வழங்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர தியேட்டர்களில், பொங்கல் பண்டிகையையொட்டி, 15ம் தேதி 20ம் தேதி வரை, ஐந்து நாட்கள், தினசரி ஐந்து காட்சிகள் நடத்திக் கொள்ளலாம்.
நடமாடும் திரையரங்குகளில், 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் காலை காட்சியும், 18, 19 மற்றும் 20ம் தேதிகளில், மேட்னி காட்சியும் நடத்திக் கொள்ளலாம். கூடுதல் காட்சி குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு, அதிகப்படியான ஒரு காட்சி (ஐந்தாவது காட்சி) நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment